அழுக்கு
வியர்வை நாற்றமும்
கிள்ளும் பசியுமாய்
காத்திருக்கின்றேன்
பேரூந்துக்காய்.
வெயிலில் உருகும்
ஐஸ் கிறீமாக
கரைகின்றன
மணித்துளிகள்
தள்ளி எட்டி
பார்க்கின்றேன்
நீளும் வீதியில்
முடிவிலியைக் காண்கின்றேன்
பேரூந்தைக் காணவில்லை.
அலுப்புடன்
எதிர்வீதியில்
திரும்பியது
பார்வை.
பொன் கேசமும்
நீல விழிகளுமாய்
வெப்பக் காங்கையில்
சுகம் காண
வருகின்றாள்
ஒரு தேவதை.
அழகுப் பதுமை
நெருங்கியபோது
தொலைந்தன விழிகள்
தேடினேன்.......
கண்டுகொண்டேன்!
பிதுங்கிய அவளின்
மார்புகளுக்குள்
புதைந்து கிடந்தன
என்னிரு விழிகள்!
பேரூந்து வராமலேயே
இருக்கட்டும்.
Comments
மார்புகளுக்குள்
புதைந்து கிடந்தன
என்னிரு விழிகள்!//
பிதுங்கிய மார்புக்குள்
புதைந்து நிடந்த விழிகள்
மெல்ல நிமிரட்டும்.
பிதுங்கிய மார்பிற்கு
சொந்தக்காரி
உன் தங்கையாக இருக்கப்போகிறாள்.
விமர்சகி
தெருவில் போகும் எல்லோருமே அக்கா தங்கைகள் என்று போலியாகக் கூறவிரும்பவில்லை.
அட..இது கூட ரெம்ப நல்லாய் இருக்கு...நன்றி..வன்னி மைந்தன்
22.3 19.11.2006
னல்ல பதிவு
1.27 21.1.2007