காணாமல் போன டயறி




தொலைந்து போயிற்று டயறி
 

இலாச்சிகள் எல்லாம் தேடினேன் 

புத்தகங்களின் நடுவிலும் தேடினேன்

அறைகள், உத்தரம் கூடத் தேடினேன் 

கிடைக்கவில்லை இன்னும். 

கல்லூரி நாட்களின் சந்தோஷ துக்கங்கள் 

கிளர்ச்சியைத் தந்த பெண்களின் ஞாபகங்கள் 

சமறிக் கணக்குகள், தொலைபேசிக் கணக்குகள் 

தீர்க்க முடியாத சமன்பாடுகளின் தீர்வுகள் 

ஊரில் வளர்த்த கடாய்க் குட்டியின் கதை 

கிறுக்கிய கவிதை வரிகள் 

எல்லாமே தொலைந்து போயிற்று. 

தொலைந்துபோனது எழுத்துக்கள்தான் 

தொலையா உணர்வுகள் 

இன்னும் என்னுள்!

Comments

sukan said…
//தொலைந்துபோனது எழுத்துக்கள்தான்
தொலையா உணர்வுகள் இன்னும்
என்னுள்!//

மனித உறவுகளை பிரிந்ததை மட்டும் மானுடம் வெளிப்படையாக உணருகின்றது. காட்சிகள் இயல்புகளை பிரிந்தது உள்ளுக்குள் புளுங்கி வேர்க்கின்றது. அவஸ்த்தையை புரிந்தவர் பலர் என்ன அவஸ்த்தை என்று புரியாதவர் பலர்.

உணர்வுகள் அருமையாக வெளிப்படுகின்றது உங்கள் படைப்புகளில்

பிரசித்த பதிவுகள்